Wednesday, May 5, 2021

சங்க இலக்கியம்: எட்டுத்தொகை நூல்கள் - வினாவங்கி

  1. எட்டுத்தொகை நூல்களின் மற்றொரு பெயர் என்ன? எண்பெருந்தொகை
  2. எட்டுத்தொகை நூல்களில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை? 2352 
  3. எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து உட்பட பாடல்களின் எண்ணிக்கை? 2358
  4. எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பற்றியன எத்தனை? 5 [நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு]
  5. எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் எத்தனை? 2[புறனானூறு, பதிற்றுப்பத்து]
  6. அகமும், புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? பரிபாடல்
  7. நானூறு பாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் எத்தனை?                        4    [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு]
  8. பதிக முன்னோடியாக அமைந்த எட்டுத்தொகை நூல்கள் யாவை? ஐங்குறுநூறு,  பதிற்றுப்பத்து
  9. பாவால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? கலித்தொகை, பரிபாடல்
  10. எண்ணிகையால் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் எத்தனை? 2
  11. ஆசிரியப்பாவால் அமைந்த எட்டுத்தொகை நூல்கள்? 6
  12. முழுமையாகக் கிடைக்கும் எட்டுத்தொகை நூல்கள்  எத்தனை? 4 [நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு]
  13. நானூறு பாடல்கள் அடங்கிய எட்டுத்தொகை நூல்கள் யாவை? 4 [நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு] 
  14. முதற்பகுதியும், இறுதியும் கிடைக்காத எட்டுத்தொகை நூல்கள் யாவை?       2 [பதிற்றுப்பத்து, பரிபாடல்]
  15. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  16. நற்றிணையைத் தொகுத்தவர் யார்? தெரியவில்லை
  17. குறைவான அடிகளோ அதிக அடிகளோ இல்லாமல் இடைநிகரவான அடிகளைக் கொண்டு இருப்பதால் நற்றிணை எனப்பட்டிருக்கலாம் என்றவர் யார்? டாக்டர் ந. சஞ்சீவி
  18. நற்றிணை பாடல் எண்ணிக்கை எத்தனை? 400+1 [401]
  19. நற்றிணை பாடிய புலவர்களின் எண்ணிக்கை யாது? 187
  20. நற்றிணை அடிவரையறை - 9 - 12
  21. நற்றிணையில் எத்தனை மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர்? 10 
  22. நற்றிணையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைபேர்? 5 [கொட்டம்பலவனார், தும்பிசேர்கீரனார், விழிக்கண்பேதைப் பெருங்க் கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றனார், தனிமகனார்]
  23. நற்றிணையில் பாடிய பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை? 9
  24. குறுந்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
  25. குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை? 400+1 [401]
  26. குறுந்தொகை அடியெல்லை - 4 - 8
  27. குறுந்தொகையில் 9 அடி உள்ள பாடல் எது? 307
  28. குறுந்தொகையில் பாடல் இயற்றிய புலவர்கள் எத்தனை பேர்? 203
  29. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்? பூரிக்கோ
  30. குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் யார்? தெரியவில்லை
  31. முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது? குறுந்தொகை
  32. குறுந்தொகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ள பாடல்கள் பாடிய புலவர் யார்? பரணர்
  33. குறுந்தொகையில் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை? 236
  34. திருவிளையாடற் புராணத்தில் தருமி வரலாற்றை அறிய உதவும் பாடல்? குறுந்தொகை -  கொங்குதேர் வாழ்க்கை
  35. குறுந்தொகையில் அதிகப் பாடல் பாடிய பெண்பாற் புலவர்கள்? நன்னாகையார், வெள்ளிவீதியார்
  36. குறுதொகையில் பாடல் இயற்றிய புலவர்களில் ஊர் பெயரோடு பெயர் பெற்றப் புலவர்கள் ? 4 [அள்ளூர் நன்முல்லையார், அரிசில் கிழார், கூடலூர் கிழார், மதுரை நல்வெள்ளியார்]
  37. குறுந்தொகையில் தொழிலால் பெயர் பெற்றப் புலவர்கள் எத்தனை பேர்? 3 [ ஆசிரியன் பெருங்கண்ணனார், கொல்லன் அழிசி, வள்ளுவன் பெருஞ்சாத்தனார்]
  38. குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனை பேர்?       18 [அணிலாடு முன்றிலார், குப்பைக் கோழியார், வில்லக விரலினார், விட்ட குதிரையார், மீனெறி தூண்டிலார், நெடுவெண்ணிலவினார்]
  39. குறுந்தொகையில் வடமொழி பெயர்கொண்ட புலவர்கள்? 6 [உருத்திரன், சண்டிலியன், உலோச்சன், மாதிரத்தன், பவுத்திரன், பிரமந்தன்]
  40. தொடரால் பெயர் பெற்றவர்கள் மிகுதியும் உள்ள நூல் எது? குறுந்தொகை 
  41. ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர் யார்? யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் பெருவழுதி
  42. ஐங்குறுநூறைத் தொகுத்தவர் யார்? கூடலூர் கிழார்
  43. ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை? 500+1 [501]
  44. ஐங்குறுநூறு அடிவரையறை? 3 - 5
  45. ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர்கள்? 5 புலவர்கள்
  46. ஐங்குறுனூறு பதிகம், சதகத்திற்கு முன்னோடி
  47. திணைக்கு ஒரு புலவர் பாடியுள்ளனர்
  48. ஐங்குறுநூற்றில் மருதம் பாடிய புலவர் யார்? ஓரம்போகியார்
  49. ஐங்குறுநூற்றில் நெய்தல் பாடிய புலவர் யார்? அம்மூவனார்
  50. ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பாடிய புலவர் யார்? கபிலன்
  51. ஐங்குறுநூற்றில் பாலை பாடிய புலவர் யார்? ஓதலாந்தையார்
  52. ஐங்குறுநூற்றில் முல்லை பாடிய புலவர் யார்? பேயனார்
  53. ஐங்குறுநூற்றில் அந்தாதித் தொடையில் அமைந்த பத்து எது?       தொண்டிப் பத்து
  54.  ஐங்குறுநூற்றில் முதல் பத்து எது?  வேட்கைப் பத்து 
  55.  பத்துப்பாடல்களிலும் முதல் அடியும் மூறாவது அடியும் ஒன்றாக இருக்கும் பத்து எது? வேட்கைப்பத்து
  56. தோற்றவர் புல் மேயச் செய்த வரலாற்றைக் காட்டும் நூல்? ஐங்குறுநூறு ["வாழி ஆதன் வாழி அவினி/ பகைவர் புல்ஆர்க: பார்ப்பார் ஓதுக"] 
  57. ஐங்குறுநூற்றில் தொடரால் பெயர் பெற்றவர் யாரும் இல்லை
  58. ஐங்குறுநூற்றில் அதிகம் குறிக்கப்படு ஆதன் என அழைக்கப்பட்டோர் யார்? ஆவியர் குடியினைச் சேர்ந்தவர்கள்
  59. கலித்தொகையைத் தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
  60. கலித்தொகையைச் சிறப்பிக்கும் வரிகள்​ : 'கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விம்வலார் கண்ட கலி, நனிஆர்வம் பொங்கும் கலி
  61. கலித்தொகைப் பாடல் எண்ணிக்கை? 149+ 1 [150]
  62. கலித்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை? 5
  63. கலித்தொகை அடிவரையறை? 11 - 80
  64. கலித்தொகையில் பாலையைப் பாடியவர்? பெருங்ககுங்கோ
  65. கலித்தொகையில் குறிஞ்சித் திணை பாடலைப் பாடியவர் யார்? கபிலன்
  66. கலித்தொகையில் மருதம் பாடியவர் யார்? மருதன் இளநாகனார்
  67. கலித்தொகையில் முல்லைத் திணை பாடியவர் யார்? நல்லுருத்திரன்
  68. கலித்தொகையில் நெய்தல் பாடியவர் யார்? நல்லந்துவனார்
  69. ஓரங்க நாடகம் போன்ற அமைப்பினைக் கொண்ட சங்க இலக்கியம்? கலித்தொகை
  70. அகநானூறைத் தொகுத்தவர் யார்? உருத்திர சன்மனார் 
  71. அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்? பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  72. அகநானூற்றின் பாகுபாடுகள் யாவை? 3 [களிற்றியானைநிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை
  73. அகநானூறு சிறப்புப் பெயர்கள் யாவை? நெடுந்தொகை, அருந்தொகை நானூறு, அகப்பாட்டு
  74. அகநானூற்றுப் பாடல் எண்ணிக்கை? 400+1
  75. அகநானூற்றுப் பாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை? 158 
  76. அகநானூற்று அடியெல்லை யாது? 13 - 31
  77. சங்கப் பாடல்களை இயற்றிய புலவர்களின் எண்ணிக்கை? 473                     [30 பெண்பாற் புலவர்கள்]

  78. களிற்றியானைநிரைப் பாடல்களின் எண்ணிக்கை? 1 - 120
  79. மணிமிடைப் பவளம் பாடல்களின் எண்ணிக்கை? 121 - 300
  80. நித்திலக்கோவை பாடல்களின் எண்ணிக்கை? 301 - 400
  81. அகநானூற்றுப் பாலைத்திணை வைப்பு - 1,3,5 [ஒற்றைப்படை]- 200
  82. அக. நா- குறிஞ்சித் திணை வைப்பு - 2, 8, 12, 18,.... [80] 
  83. அகநானூறு முல்லை வைப்பு - 4, 14, 24 [40]
  84. அகநானூறு மருதம் வைப்பு - 6, 16, 26 [40]
  85. அகநானூறு நெய்தல் வைப்பு - 10, 20, 30 [40]
  86. அகநானூற்றின் செம்பாதி எத்திணைப் பாடல்கள் அதிகம்? பாலை
  87. அகநானூற்றில் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்? கீரனார், ஊட்டியார்
  88. தமிழரி திருமண முறையைக் காட்டம் பாடல்? அகம் - 86
  89. சங்க காலத்தில் குடவோலை தேர்தல் முறை இருந்ததைக் காட்டும் பாடல்? அகம் - 77
  90. பெண்கள் உப்பிற்கு விலையாக நெல்லை வழங்கியமைக் காட்டும் பாடல்? 140
  91. குறிஞ்சிப்பண் பாடலைக் கேட்ட யானை திணையை உண்ண மறந்து தூங்குதல்
  92. அகநானூற்றில் இடம் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை? 10 [அஃதை, அகுதை, அதியமான் நெடுமான் அஞ்சி, அத்தி, ஆதிமந்தி, எவ்வி, எழினி, உதியஞ்சேரலாதன்,  கரிகால் வளவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 
  93. அழிசி என்னும் சோழர் மரபு மன்னனின் தோட்டத்து நெல்லிக்கனிக்கு ஏங்கும் பறவைகள் - வௌவால்
  94. நெல்லியின் புளிப்புச்சுவையை நினைத்து வௌவாள்கள் கனவில் என வௌவால் கனவு காணும் அறிவியல்  உண்மையைச் சுட்டும் இலக்கியம் நற்றிணை 
  95. வௌவாலை நற்றிணை எவ்வாறு சுட்டுகிறது? வாவல்
  96. நெடும்பல்லியத்தை என்னும் பெண்பாற் புலவரின் பெயர் உணர்த்துவது? நீண்ட, பல, இசைக்கருவிகள் இசைப்பவள்
  97. வினை முடித்துத் திரும்பும் தலைவனை ஓரேர் உழவனுடன் ஒப்பிடும் இலக்கியம்- குறுந்தொகை
  98. பகைவர் தோல்வியைக் குறிக்க புல் மேய்வது போல குப்புற விழச் செய்வதைப் 'பகைவர் புல் ஆர்க' என்னும் அடி இடம்பெற்றுள்ள இலக்கியம் ஐங்குறுநூறு
  99. பண்டையத்தமிழர் திருமண முறைகள் குறித்த அகநானூற்றின் பாடலைப் பாடியவர் - நல்லாவூர்கிழார்
  100. திணை உண்ண வந்த யானை குறத்தியின் பாடல் இனிமையில் மயங்கி உறங்கியதாகக் கூறும்  இலக்கியம் - அகநானூறு
  101. அகநானூறு குறிக்கும் தேர்தல் முறை - குடவோலை முறை
  102.  செல்வக்கடுங்கோ வாழியாதன் தன்னை புரோசு மயக்கி எனத் தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டான்
  103. ஓகத்தூர்  என்பதன் பொருள்- ஓத்திர நெல் மிகுதியாக விளையும் ஊர்
  104. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பொருள் ஆட்டத்தில் சிறந்தவன், கவர்ந்து செல்லப்பட்ட வருடை ஆடுகளை மீட்டுக் கொணர்ந்தமையால்
  105. பதிற்றுப்பத்தில் பாடல் முடிவில் துறை, வண்ணம், தூக்கு, பாடல் பெயர்  குறிக்கப்பட்டுள்ளன. 
  106. அந்தாதியின் முன்னோடி இலக்கியங்கள் - ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து
  107. பதிற்றுப்பத்தை பிற்காலத்து நூல் என்றவர்? கே. என்.சிவராசப்பிள்ளை
  108. பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துப் பாடலின் இறுதியில் அமைந்திருப்பது? பதிகம்
  109. பதிற்றுப்பத்துப் பதிகங்களின் போக்கு மெய்க்கீர்த்திகளின் போக்கை ஒத்துள்ளதாகக் கூறியவர்? தமிழண்ணல்
  110. பதிற்றுப்பத்தின் சிறப்புப் பெயர் என்ன? இரும்புக் கடலை
  111. கைம்பெண்ணை புறநானூறு எவ்வாறு அழைக்கிறது? பருத்திப் பெண்டீர் [ பருத்தி நூற்கும் பெண்]
  112. பரிபாடலில் குறிக்கப்படும் எண் பெயர்கள் 0 - பாழ்,1/2 - பாகு, 9 - தொண்டு ["பாழ் என கால் என  பாகு என ஒன்று என .....தொண்டு என"]
  113. உன்ன மரம் தழைத்தால் போரில் வெற்றிகிட்டும் எனக் கூறும் இலக்கியம்? பதிற்றுப்பத்து
  114. ஏறுதழுவல் குறித்துப் பேசும் இலக்கியம்? கலித்தொகை [முல்லைக்கலி]
  115. "என்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த தேர் அன்னோன்" யார்? அதியமான் நெடுமானஞ்சி [ஔவை]
  116. "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்                                               புதுவதன்று உலகத்து இயற்கை" என்றவர் - இடைக்குன்றூர் கிழார்
  117. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றவர் கனியன் பூங்குன்றனார்
  118. "பாலொடு வந்து கூழொடு பெயரும் /ஆடுடை இடைமகன்" என பண்டமாற்று முறை குறித்துக்கூறும் பாடல் - குறுந்தொகை
  119. நண்டின் கண் வேம்பின் அரும்புபோல இருக்கும் எனக் கூறும் நூல் -ஐங்குறுநூறு
  120. தன் பார்ப்பைத் தானே திண்ணும் விலங்காக ஐங்குறு நூறில் குறிக்கப்படும் விலங்கு - முதலை
  121. ஐங்குறுநூறில் அந்தாதித்தொடையில் அமைந்த பத்து- தொண்டிப்பத்து
  122. இமயம், குமரிக்கு இடைப்பட்ட இடத்தை ஆட்சி செய்தவன் - இமயவரம்பன்

No comments:

Post a Comment

பக்தி இலக்கியம் - வைணவம்

   பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...