1. பதினெண் கீழ்க்கணக்கு- இதில் உள்ள கணக்கு என்பதன் பொருள் யாது? நூல்
2. கீழ் என்பதன் பொருள் யாது? குறைந்த அடி அளவு கொண்டவை
3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை 'அடிநிமிர்பில்லாச் செய்யுள்' தொகுதி எனக் குறிப்பது? பன்னிரு பாட்டியல்
4. அடி குறைந்த கெழ்கணக்கு நூல்கள் அம்மை என்னும் அழகு பெற்றுவரும் எனக் கூறும் நூல்? தொல்காப்பியம்
5. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் வழக்கை முன்வைத்தவர்கள்? பேராசிரியர்இ மயிலைநாதர்
6. அறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை? 11
7. புறம் பேசும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை ? 1
8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6
9. கருத்துக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 4 - நாண்மணிக்கடிகை, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம்
10. பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை? 8 - பழமொழியைப் பழமொழி நானூறு எனக் கொண்டால் 9
11. நாலடியாரின் வேறு பெயர் என்ன? நாலடி நானூறுஇ வேளாண் வேதம்
12. நாலடியாரில் எத்தனைப்பாடல்கள் உள்ளன? 400
13. நாலடியாரைத் தொகுத்தவர் யார்? பதுமனார்
14. நாலடியாரின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்? பதுமனார்
15. நாலடியார் எத்தனைப் பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது? அறம், பொருள், இன்பம் / 12இயல்கள்
16. நாளடியாரில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 40
17. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்
18. நாலடியாரின் காலம் எது? கி.பி 7ஆம் நூற்றாண்டு
19. நாலடியாரின் காலத்தைக் கணிக்க உதவுவது எது? பெருமுத்திரையர்கள் பற்றிய குறிப்பு
20. எத்தனை சமண முனிவர்களில் தப்பியவை நாலடியார் என நம்பப்படுகிறது? 8000 சமண முனிவர்கள்
21. நாலடியாரை மேற்கோளாகக் கையாண்ட உரையாசிரியர்கள் யாவர்? பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்
22. சமண முனிவர் நக்கீரரால் நாலடியார் இயற்றப்படதாகக் கூறும் நூல் எது? யாப்பருங்கல உரை . ஆனால் இதற்கு சான்று இல்லை. யாரும் இக்கருத்தை ஏற்கவில்லைஸ
23. நாலடியார் எத்தனைப் பால்களைக் கொண்டது? 3
24. அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 13
25. பொருட்பாலில் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 24/26
26. காமத்துப்பாலில் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 3/1
27. நாலடியாரின் வேறு பெயர்கள் யாவை? நாலடி, நாலடி நானூறு, வேளாண் வேதம்
28. நாலடியாருக்கு பழைய உரைகள் எத்தனை உள்ளன? 3 பதுமனார், தருமர், பெயர் தெரியாத உரை
29. நாலடியாருக்கு முதலில் உரை எழுதி அதிகாரங்கள் வகுத்தவர் யார்? பதுமனார்
30. மூவர் உரையையும் தொகுத்து பதிப்பித்தவர்கள் ? சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
31. 1812 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாலடியார் உரைகளை எழுதியவர்கள் யாவர்? புதுவை நயனப்ப முதலியார், புதுவை அ.வேதகிரி முதலியார்
32. திருமயிலை முருகேச முதலியார் நாலடியாரை உரை எழுதி வெளியிட்ட காலம் யாது? 1874
33. கோமளபுரம் இராசகோபால் பிள்ளை உரை வெளியான ஆண்டு யாது? 1904
34. [களத்தூர்] வேதகிரி முதலியார் நாலடியாருக்கு உரை எழுதிய காலம் யாது? 1908/1913
36. வை.மு. சடகோப இராமாநுசாச்சாரியார் நாலடியாருக்கு உரை எழுதிய ஆண்டு யாது? 1921
37. வே. நாராயண ஐயர் நாலடியாருக்கு உரை எழுதிய காலம் யாது? 1924
38. திருக்குறளுக்கு இணையாகக் கொள்ளப்படும் அறநூல் எது? நாலடியார்
39. திருக்குறளையும், நாலடியாரையும் இணைத்துப் பேசும் சொலவடைகள் யாவை?
“ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”, “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்”, “நாலும் இரண்டும் கற்றவனிடம் வாயடியும், கையடியும் செல்லாதடி”
40. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஆர் விகுதி பெற்ற இலக்கியம் யாது? நாலடியார்
41. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யு. போப்
42. பெருமுத்திரையர்கள் குறித்தக் குறிப்பு உள்ள இலக்கியம் யாது? நாலடியார்
43. பெருமுத்தரையர்களின் காலம் யாது? கி.பி. 7ஆம் நூற்றாண்டு
44. பெருமுத்தரையர்கள் யாருடைய காலத்தில் சிற்றரசர்களாக இருந்தார்கள்? பரமேசுர வர்ம பல்லவன்
45. முத்தரையர்கள் எந்நாட்டைச் சேர்ந்தவர்கள்? பாண்டி நாடு - சிற்றரசர்கள்
46. நாலடியாரை வேளாண் வேதம் என்பதைச் சுட்டுவது யாது? தனிப்பாடல்
47. நான்மணிக்கடிகையை இயற்றியவர் யார்? விளம்பிநாகனார்
48. கடிகை என்பதன் பொருள் யாது? கட்டுவடம், ஆபரணம், துண்டு
49. நான்மணிக்கடிகையில் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியவை? திருமால் பற்றிய இரு பாடல்கள்
50. நாண்மணிக்கடிகையில் பாடல் தோறும் எத்தனைக் கருத்துக்கள் எடுத்தாளப்படும்? 4
51. இன்னாநாற்பதில் எத்தனை இன்னாதவைப் பேசப்படுகின்றன? 164
52. இனியவைநாற்பது எக்கடவுளுக்கு வாழ்த்துப் பாடுகிறது? சிவன், திருமால்
53. திரிகடுகம் இதில் உள்ள கடுகம் என்பது யாது? காரம்
54. ஒவ்வொரு பாடலிலும் மூன்றாமடியில் இம்மூன்றும், இம்மூவர் எனக் குறிக்கப்படும் இலக்கியம் யாது? திரிகடுகம்
55. ஆசாரக்கோவையில் பயின்றுள்ள பாவகைகள் யாவை? குறள் வெண்பா, குறள் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா
56. ஆசாரக்கோவையில் எந்தெந்த வடநூற்களின் கருத்துக்கள் உள்ளன? சக்ர ஸ்மிருதி, கௌதம சூத்திரம், போதாயன தர்ம சூத்திரம்
57. ஆசாரக்கோவையை சார்புநூலுக்குச் சான்றாகச் சுட்டும் ஆசிரியர் யார்? இலக்கணவிளக்கப் பாட்டியல்
58. பழமொழியின் வேறு பெயர் யாது? பழமொழி நானூறு
59. பழமொழியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 34
60. தொல்காப்பியர் பழமொழியை எவ்வாறு சுட்டுகிறார்? முதுசொல்
61. நீதிநூல்களில் அதிகமான வரலாற்றுச் செய்திகளைக் கொண்ட இலக்கியம் யாது? பழமொழி
62. பழமொழி நானூறில் காட்டப்படும் மன்னர்கள் யாவர்? கரிகாற் சோழன், பொற்கைப் பாண்டியன், பாரி, பேகன், மனுநீதிச் சோழன்
63. முன்றுறை அரையனாரில் உள்ள அரையன் குறிப்பது? அரசன்
64. முன்றுரை அரையனார் பெயாpல் உள்ள முன்றுரை என்பது? முன்துறை என்னும் ஊர்ப் பெயர்
65. முன்துறை பாண்டிய நாட்டில் உள்ள ஊர் எனக் குறிப்பவர் யார்? செல்வ கேசவராய முதலியார்
66. பழமொழியை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்? செல்வ கேசவ முதலியார்
67. காரியாசானின் ஆசிhpயர் யாரென பாயிரம் சுட்டுகிறது? மாக்காயன்
68. காரியாசானின் ஒருசாலை மாணாக்கர் யார்? கணிமேதாவியார்
69. சிறுபஞ்சமூலம் காட்டும் வழுதுணை என்பது யாது? கத்திரிக்காய்
70. பெரும்பஞ்சமூலம் பற்றிக் குறிக்கும் நூல் யாது? பதார்த்தகுண சிந்தாமணி, பொருள் தொகை நிகண்டு
71. முதுமொழிக்காஞ்சியின் பா யாது? குறள் தாழிசை
72. முதுமொழிக் காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 10
73. முதுமொழிக்காஞ்சியின் ஒவ்வொரு பத்தும் எவ்வாறு தொடங்கும்? “ஆர்கலி உலகத்து…”
74. ஓவ்வொரு பாடலிலும் “ஆர்கலி உலகத்து” என்னும் தொடரைக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளும் நூல் எது? முதுமொழிக் காஞ்சி
75. ஆத்திச்சூடிக்கு முன்னோடி யாது? சிறுபஞ்சமூலம்
76. ஓன்பதைத் தொண்டு எனக் குறிக்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் யாது? ஏலாதி
77. உடலின் அடிப்படையான தொழில்கள் என்று ஏலாதி சுட்டுவன எத்தனை? 6
78. தூக்கணாங் குருவி, பட்டுப்புழு, எறும்பு தேனீக்களின் கூட்டை எந்த அறிஞராலும் உருவாக்க முடியாது எனக் குறிக்கும் நூல் யாது? சிறுபஞ்சமூலம்
79. சூல், சூல்கொண்ட பெண்கள் குறித்துக் கூறும் நூல் யாது? சிறுபஞ்மூலம்
80. நான்மணிக்கடிகையின் காலம் யாது? கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
81. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விளம்பிநாகனார்
82. நான்மணிக்கடிகையின் பாடல்களின் எண்ணிக்கை யாது? 104 + 2
83. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருந்துப் பொருள் பெயரினால் ஆன நூல்கள் எத்தனை? 3
84. ஏலாதியின் பாடல் எண்ணிக்கை யாது? 80 + 2
85. ஐந்திணை அறுபது எனப்படும் நூல் எது? கைந்நிலை
86. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார்? மூவாதியார்
87. 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல்கள் எத்தனை? 11
88. சிறுபஞ்சமூலத்தில் உள்ள வழுதுணை என்பது யாது? கத்திரிக்காய்
89. திரிகடுகத்தில் உள்ள கடுகம் என்பதன் பொருள் யாது? காரம்
90. ஏலாதியில் உள்ள மருந்துப் பொருட்கள் யாவை? ஏலம், இலவங்கம், நாககேசரம்
91. நாலடியாரில் உள்ள பால்கள் எத்தனை? 400
92. நாலடியாரின் காலம் யாது? 7ஆம் நூற்
93. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் பெயர் யாது? காhpயாசான்
94. ஏலாதி ஆசிரியர் யார்? கணிமேதாவியார்
95. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார்? மூவாதியார்
96. ஐந்திணை அறுபதின் ஆசிரியர் யார்? புல்லங்காடனார்
97. கார்நாற்பதின் ஆசிரியர் யார்? மதுரை கண்ணங்கூத்தனார்
98. களத்து என முடியும் பாடல்களைக் கொண்ட இலக்கியம் யாது? களவழிநாற்பது
99. ஆசாரக்கோவையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? பெருவாயின் முள்ளியார்
100. திரிகடுகத்தின் காலம் யாது? கி.பி. 5 நூற்றாண்டு
101. திரிகடுகத்தின் ஆசிரியர் யார்? நல்லாதனார்
102. திரிகடுகத்தின் பாடல்களின் எண்ணிக்கை யாது? 100 ñ 1
103. பழமொழியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
104. பழமொழியின் ஆசிரியர் யார்? முன்றுரையரையனார்
105. ஆசாரக்கோவை காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
106. ஆசாரக்கோவை பாடல்களின் எண்ணிக்கை யாது? 100
107. முதுமொழிகாஞ்சியின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
108. முதுமொழிகாஞ்சியின் ஆசிரியர் யார்? கூடலூர் கிழார்
109. முதுமொழிகாஞ்சியின் பாடல்களின் எண்ணிக்கை யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
110. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் யார்? மூவாதியார்
111. ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் யார்? மாறன்பொறையனார்
112. கழுமலம் என்னும் இடத்தில் நடைபெற்ற போர் குறித்த நூல் எது? களவழி நாற்பது
113. தூக்கணாங்குருவி கூடு குறித்த செய்தி இடம்பெறும் நூல் எது? சிறுபஞ்சமூலம்
114. கபிலரும், கபில தேவரும் வேறாவர்கள் என்றவர் யார்? பண்டாரத்தார்
115. “ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை” குறித்துப் பேசும் இலக்கியம் யாது? இனியவை நாற்பது
116. வெல்வது வேண்டின் வெகுளி விடல் - இவ்வரி இடம்பெறும் பாடல் யாது? நான்மணிக்கடிகை
117. நீராடல், நீரருந்தல், உண்ணல் போன்ற சிறு சிறு செயல்களுக்கான ஒழுக்கங்களைக் கூறும் இலக்கியம் யாது? ஆசாரக்கோவை
118. அந்தணர் வீட்டில் நாய், கோழி நுழையக் கூடாது எனக் கூறும் நூல்? இன்னாநாற்பது
119. கணவன், மனைவி வாழ வேண்டிய நெறிகளை 35 பாடல்களில் எடுத்துரைக்கும் இலக்கியம்? திரிகடுகம்
120. “நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு” - என்ற வரி இடம்பெற்ற நூல் யாது? சிறுபஞ்சமூலம்
121. மன்னுதல் வேண்டின் இசைநடுக - என்னும் இடம் யாது? நான்மணிக்கடிகை
122. மனைக்கு விளக்கம் மடவாள் - எனக் கூறும் இலக்கியம் யாது? நான்மணிக்கடிகை
123. வானூர் மதியம் போல் வைகலும் தேயும் - சிறியார் நட்பு எனக் கூறும் நூல் எது? நாலடியார்
124. “வேளாண் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” - எனக் கூறும் நூல் யாது? திரிகடுகம்
125. பிறருக்கு உணவிடுதலின் சிறப்பை அதிகப் பாடல்களில் குறிக்கும் நூல் யாது? ஏலாதி
126. முப்பெரும் கடவுளருக்கு கடவுள் வணக்கம் கூறும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் யாவை? இனியவை நாற்பது
127. "குலவிச்சைக் கல்லாமல் பாகம்படும்” -இத்தொடர் இடம்பெற்றுள்ள இலக்கியம் யாது? பழமொழி
128. முப்பெரும் அறநூல்கள் யாவை? திருக்குறள், நாலடியார், பழமொழி
129. வச்சிரநந்தியின் சங்கம் அமைந்திருந்த இடம் யாது? மதுரை
130. பழமொழியைத் தொல்காப்பியர் எவ்வாறு சுட்டுகிறார்? முதுசொல்
131. கரிகாற்சோழன் நரை வேடமிட்டு நீதியளித்ததைச் சுட்டும் நூல் யாது? பழமொழி
132. ஆத்திச்சூடிக்கு முன்னோடியாக விளங்கும் நூல் யாது? முதுமொழிக்காஞ்சி
133. உடலின் அடிப்படைத் தொழில்கள் ஆறு என சுட்டும் இலக்கியம் யாது? ஏலாதி
No comments:
Post a Comment