Friday, June 18, 2021

சமயக்காப்பியங்கள்

 

  1. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் சமண, பௌத்த சமயக் காப்பியங்கள்  
  2. பெருங்கதை எந்த சமய காப்பியம்? சமணம்
  3. பெருங்கதை எக்காப்பியத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது? பிருகத்கதா [பிருகத் - பெரிய]
  4. பிருகத்கதா எம்மொழியில் இயற்றப்பட்டது? பைசாச
  5. பிருகத்கதா யாரால் இயற்றப்பட்டது? குணாட்டியார்
  6. பெருங்ககை எவ்வாறு அழைக்கப்படும்? உதயணன் கதை, கொங்குவேளிர் மாக்கதை
  7. பெருங்கதையின் காலம்? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
  8. பெருங்கதை எந்தப் பாவால் ஆனது? ஆசிரியப்பா
  9. முதல் சமணக் காப்பியம் எது? பெருங்கதை
  10. பெருங்கதையின் ஆசிரியர் யார்? கொங்குவேள் [கொங்குவேளீர்]
  11. பெருங்கதை எத்தனை அடிகளைக் கொண்டது? 16,230
  12. பெருங்கதையின் காண்டங்கள் எத்தனை? 5 [உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகதக் காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம்]
  13. பெருங்கதையில் கிடைக்காத பகுதி யாது? உஞ்சைக் காண்டத்தில் முதல் 31 தலைப்புக்களில் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.
  14. பெருங்கதையில் கிளைக் கதைகள் மிகுந்துள்ளதால் அதனைக் கதைக் கடல் என்றவர் யார்? உ.வே. சாமிநாதையர்
  15. விம்பிசாரக்கதை எந்த சமயக் காப்பியம்? பௌத்தர்
  16. விம்பிசாரக் கதை யாது? கௌதம புத்தர் அருளால் பௌத்தராக மாறிய விம்பிசாரன் என்ற மகத நாட்டு மன்னனின் வரலாறு கூறும் காப்பியம்.
  17. ஸ்ரீபுராணம் எந்த சமய நூல்? சமண சமய நூல்
  18. ஸ்ரீபுராணம் எதன் மொழிபெயர்ப்பு நூலாகும்? வடமொழி மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பு  
  19. மேருமந்திர புராணம் எந்த சமயக் காப்பியம்? சமணம்
  20. மேருமந்திர புராணத்தின் ஆசிரியர்? வாமனாச்சாரியார்
  21. வாமனாச்சாரியார் உரை எழுதிய காப்பியம் யாது?  நீலகேசி
  22. சமணர்களின் 'சமயச் சாரம்' என்று அழைக்கப்படும் காப்பியம்? மேருமந்திர புராணம்
  23. மேருமந்திர புராணம் மேரு, மந்திரா என்ற இரு உடன்பிறந்தோரின் வரலாற்றைக் கூறும்
  24. மேருமந்திர புராணத்தின் முதல் நூல் எது? ஸ்ரீபுராணம் 
  25. மேருமந்திர புராணத்தின் சருக்கங்கள் எத்தனை? 13
  26. மேருமந்திர புராணத்தின் பாடல்கள் எத்தனை? 1405
  27. மேருமந்திர புராணத்தின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
  28. பாரத கதை கூறும் நூல்கள் யாவை? பாரத வெண்பா, நளவெண்பா, வில்லிபாரதம், நைடதம், வசு சரித்திரம், நல்லாப்பிள்ளை பாரதம், பாரதியின் பாஞ்சாலி சபதம்
  29. பாரத வெண்பாவின் ஆசிரியர் யார்? பெருந்தேவனார்
  30. பாரத வெண்பாவின் காலம் யாது? 9 ஆம் நூற்றாண்டு
  31. பாரத வெண்பாவில் கிடைத்துள்ள பருவங்கள் எத்தனை? 3 [உத்தியோக பருவம், பீஸ்ம பருவம், துரோண பருவம்]
  32. பாரத வெண்பாவில் கிடைத்துள்ள மொத்த பாடல்கள் எத்தனை? 830
  33. கலி ஒருவனைப் பிடித்தால் நடப்பவை எவை எனக்கூறும் காப்பியம் யாது? நளவெண்பா
  34. நளவெண்பாவின் ஆசிரியர் யார்? கவிச்சக்கரவர்த்தி புகழேந்திப் புலவர்
  35. நளவெண்பாவில் உள்ள காண்டங்கள் யாவை? 3 [சுயம்வர காண்டம், கலி தொடர் காண்டம், கலி நீங்கு காண்டம்]
  36. நளவெண்பாவில் உள்ள பாடல்கள் எத்தனை? 410
  37. வில்லி பாரதத்தை இயற்றியவர் யார்? வில்லி புத்தூரார்
  38. வில்லி புத்தூராரை ஆதரித்த மன்னன் யார்? வரபதி
  39. வில்லிபுத்தூரார் காலம் யாது? கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
  40. வில்லி பாரத படலங்கள் எத்தனை? பாரத கதை முழுவதையும் பேசாமல் 18 படலங்களில் 10 படலங்கள் மட்டுமே இயற்றி உள்ளார்
  41. வில்லி பாரத பாடல்களின் எண்ணிக்கை யாது? 4351
  42.  நைடதத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்
  43. நைடதத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  44. நைடதம் என்ன பாவால் ஆனது? விருத்தப்பா
  45. நைடதத்தில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 1172
  46. நைடதத்தைச் சிறப்பிக்கும் பழமொழி யாது? "நைடதம் புலவர்க்கு ஔடதம்"
  47. வசு சரித்திரம் யாரால் இயற்றப்பட்டது? அம்பலத்தாடும் ஐயன்
  48. வசு சரித்திரத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
  49. வசு சரித்திரத்தின் பா யாது? விருத்தப்பா
  50. வசு சரித்திரத்தின் படலங்கள் யாவை? 32
  51. வசு சரித்திரத்தின் பாடல்கள் எத்தனை? 1003
  52. வசு சரித்திரத்தின் மூல கதை யாது? மகாபாரதத்தின் ஆதி பருவ வசுவின் கதை
  53. நல்லாப்பிள்ளை பாரதத்தின் காலம் யாது? கி.பி.18ஆம் நூற்றாண்டு
  54. நல்லாப்பிள்ளை பாரதத்தின் வருவம் எத்தனை? 18 பருவம்
  55. நல்லாப்பிள்ளை பாரதத்தின் பாடல்கள் எத்தனை? 15300
  56. பாரதியின் பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது? 5 சருக்கம் கொண்ட குறுங்காவியம் ஆகும்
  57. கம்பராமாயணத்தின் காலம் யாது? 9 அல்லது 12 ஆம் நூற்றாண்டு
  58. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்? சடையப்ப வள்ளல்
  59. கம்பராமாயண பா வடிவம் யாது? மொத்தம் 8 வகை பாக்கள் கலந்தது. அவற்றில் கலிவிருத்தம் மிகுதியாக உள்ளது.
  60. கம்ப ராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 6 [பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்]
  61. கம்பராமாயண படலங்களின் எண்ணிக்கை? 118
  62. கம்பராமாயண பாடல்களின் எண்ணிக்கை? 10,500
  63. கம்பராமாயணத்தில் பயின்றுள்ள சந்த வேறுபாடுகள் எவ்வளவு? 460
  64. கம்பர் எழுதிய பிற நூல்கள் யாவை? ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி [நம்மாழ்வார் குறித்த நூல்] 
  65. கம்பரைச் சிறப்பிக்கும் சொற்றொடர்கள் யாவை? கல்வியில் பெரியவர் கம்பர், கம்பனாரிடைப் பெருமையுள்ளது, கம்பன் வீட்டுள் ஒரு சிறுபுன் கட்டுத்தறியும் கவி செய்யும், கவிச்சக்கரவர்த்தி கம்பர், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்.
  66. வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் காப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார் என்றவர் யார்? மு. இராகவையங்கார்
  67. கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்கநீக்கம், மகாபாரதம் முதலானவற்றை வெல்லும் சிறப்புடையது என்பது மட்டுமன்றித் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும் என்றவர் யார்? வ.வே.சு. ஐயர்
  68. கம்பன்மொழி, செந்தமிழின் கவித்திறத்தின் காட்சி என்றவர் யார்? பாகவதம்
  69. உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை என்றவர் யார்? எஸ். மகாராஜன்
  70. "கம்பனைப்போல்  வள்ளுவன்போல் இளங்கோவைப் போல் பூமிதனில்  யாங்கனுமே பிறந்ததில்லை" என்றவர் யார்? பாரதியார்
  71. "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" - என்றவர் யார்? பாரதியார்
  72. "வெய்யிற் கேற்ற நிழலுண்டு/ வீசும் தென்றல் காற்றுண்டு/ கையில் கம்பன் கவியுண்டு" - என்றவர் யார்? கவிமணி
  73. "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்" என்றவர் யார்?  திருத்தக்க தேவர் 
  74. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் யாது? இராமாவதாரம்
  75. கம்பராமாயணம் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தின் தழுவல் நூலே.
  76. வால்மீகி எழுதாத கம்பராமாயணத்தில் உள்ள படலங்கள் யாவை? இரணியன் வதைப்படலம், மாயாசனகப் படலம்
  77. கம்பர் எத்தனை நாட்களில் இராமாயணத்தைப் பாடியவர் யார்? பதினைந்து நாட்கள்
  78. இராமாயணத்தோடு தொடர்புடைய  நூட்கள் யாவை? இரகுவம்சம், இராமாயண் வெண்பா, இராவண காவியம் 
  79. இரகுவம்சத்தின் ஆசிரியர் யார்? அரசகேசரி
  80. அரச கேசரி யாருடைய மகன்? இலங்கை மன்னன் பரராச்சேகரன் மகன் 
  81. அரசகேசரியின் ஊர் எது? இலங்கையில் உள்ள நல்லூர்
  82. இரகுவம்சத்தின் காலம் யாது? கி.பி. 15 [அல்லது] 17 ஆம் நூற்றாண்டு
  83. இரகுவம்சத்தின் பாடல்கள் எத்தனை? 2500 [காப்பு - 1, பாயிரம் - 8]
  84. இரகுவம்சம் எதன் தழுவல் நூல்? காளிதாசர் எழுதிய இரகுவம்சம் [பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுதற்கு உரியது]
  85. இராமாயண் வெண்பாவின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய ஐயர்.
  86. இரவண காவியத்தின் ஆசிரியர் யார்? புலவர் குழந்தை
  87. இராவண காவியம் வெளியான ஆண்டு எது? கி.பி. 1946
  88. அரிச்சந்திர புராணத்தின் ஆசிரியர் யார்? வீரகவிராயர்
  89. கூர்மபுராணம், காசிக் காண்டத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்
  90. தேம்பாவணியின் ஆசிரியர் யார்? வீரமாமுனிவர்
  91. வீரமாமுனிவரின் இயற்பெயர் யாது? கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி
  92. வீரமாமுனிவருக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் அளித்த பெயர் யாது? தைரியநாதன் [இதைத் தமிழ்ப்படுத்தியே வீரமாமுனிவர் என மாற்றினார்]
  93. தேம்பாவணி எந்த சமயக் காப்பியம்? கிறித்தவம்
  94. தேம்பாவணியின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  95. தேம்பாவணியின் பாவகை? விருத்தப்பா
  96. தேம்பாவணியின் பாடல்கள் எத்தனை? 3615
  97. தேம்பாவணியின் பெயர் காரணம் யாது? தேம்பா+ அணி - வாடாத மாலை, தேம்+பா+அணி - தேன் ஒத்த பாக்களால் ஆன நூல்
  98. தேம்பாவணியின் காண்டங்கள் எத்தனை? 3
  99. தேம்பாவணியின் படலங்கள் எத்தனை? ஒவ்வொரு காண்டத்திற்கும் 12 வீதம் 36 படலங்கள்
  100. தேம்பாவணியின் காப்பியத் தலைவன் யார்? வளன் [சூசை]
  101. தேம்பாவணியை புறநிலைக் காப்பியம் என்றவர் யார்? வீரமாமுனிவர்
  102. கம்பராமாயணத்தில் பாடப்படாத பொருள் யாது? இன்பம்
  103. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் யார்? ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை
  104. இரட்சணிய யாத்திரிக பாடல்கள் எண்ணிக்கை? 3766
  105. இரட்சணிய யாத்திரிக பாக்கள் யாவை? கலிப்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, வஞ்சிப்பா
  106. இரட்சணிய யாத்திரிகம் இயற்றி முடிக்க ஆன காலம்? 14 வாரம்
  107. இரட்சணிய யாத்திரிகம் எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு? 1891
  108. இரட்சணிய யாத்திரகத்தின் எதன் தழுவல் நூல்? ஜான் பன்யன் எழுதிய 'தி பில்கிரிம்ஸ் புரோக்ரஸ்' என்பதன் தழுவல்
  109. இரட்சணிய யாத்திரிகத்தின் தலைவன், தலைவி யார்? கிறித்தவன், ஆன்மா
  110. இரட்சணிய யாத்திரிகம் நாயகன் நாயகி பாவத்தில் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
  111. இயேசு காவியத்தின் ஆசிரியர் யார்? கண்ணதாசன்
  112. இயேசு காவியத்தின் காலம் யாது? 1981
  113. இயேசு காவியம் எத்தனை பாகம் கொண்டது? 5
  114. இயேசு காவிய தலைப்புகள் எத்தனை? 149
  115. சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்? உமறுபுலவர்
  116. உமறுபுலவரை ஆதரித்த வள்ளல் யார்? சீதக்காதி
  117. சீறாப்புராணத்தின் காலம் யாது? 17 ஆம் நூற்றாண்டு
  118. சீறாப்புராணத்தின் பா யாது?  விருத்தப்பா
  119. சீறாப்புராண படலங்கள் யாவை? 92
  120. சீறாப்புராண பாடல்கள் எத்தனை? 5027
  121.  சீறாப்புராண காண்டங்கள் எத்தனை? 3 [விலாதத்துக் காண்டம், நுபுல்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம்]
  122. சீறாப் புராண கதைத்தலைவன் யார்? நபிகள் நாயகம்
  123. முகியித்தீன் புராணத்தின் வேறு பெயர் யாது? குத்பு நாயகம்
  124. முகியித்தீன் புராண ஆசிரியர் யார்? சேகுனாப் புலவர்
  125. முகியித்தீன் புராணத்தின் காலம் யாது? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  126. முகியித்தீன் புராண காண்டங்கள் எத்தனை? 2
  127. முகியித்தீன் புராண பாடல்களின் எண்ணிக்கை? 1343
  128. மருமக்கள் வழி மான்மியத்தின் ஆசிரியர் யார்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  129. மருமக்கள் வழி மான்மியத்தின் காலம்? கி.பி. 19 ஆம் நூற்றாண்டு
  130. பாண்டியன் பரிசை இயற்றியவர் யார்? பாரதிதாசன்
  131. பாண்டியன் பரிசு  வெளியான ஆண்டு எது? கி.பி. 1943
  132. பூங்கொடியின் ஆசிரியர் யார்? முடியரசன் 
  133. பாரதசக்தி மகாகாவியத்தின் ஆசிரியர் யார்? சுத்தானந்த பாரதியார்
  134. பாரதசக்தி மகாகாவியத்தின் காலம் யாது? கி.பி. 20 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

பக்தி இலக்கியம் - வைணவம்

   பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...