Sunday, June 20, 2021

பக்தி இலக்கியம் - வைணவம்

 

  1.  பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார்.
  2. பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்
  3. பொய்கையாழ்வார் பிறந்த நாள் யாது? ஐப்பசி திங்கள் திருவோண நாள்
  4. பொய்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 6/8 ஆம் நூற்றாண்டு
  5. திருமாலின் சங்கின் பெயர் யாது? பாஞ்சசன்னியம்
  6. பாஞ்சசன்னியத்தின் அவதாரமாகத் தோன்றிய ஆழ்வார் யார்? பொய்கையாழ்வார்
  7. பொய்கையாழ்வார் பாடல்கள் முதல் திருவந்தாதி
  8. முதல் திருவந்தாதியின் பாடல் எண்ணிக்கை யாது? 100
  9. பொய்கையாழ்வாரும் களவழி நாற்பதைப் பாடிய பொய்கையாரும் ஒருவரே என்றவர் யார்? மு. இராகவையங்கார்
  10. பொய்கையாழ்வார் எந்தெந்தத் தலங்களில் உறையும் திருமாலின் பெருமைகளைப் பாடுகிறார்? திருவரங்கம், திருவிண்ணகரம், திருவேங்கடம், திருவெஃகா, திருக்கோவிலூர்
  11. இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பூதத்தாழ்வார்
  12. பூதத்தாழ்வார் பெயர்க் காரணம் யாது? திருமாலை கடல் வண்ணன் பூதம், மற்த்திரு மார்பன் அவன் பூதம் எனப் பாடியமையால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்
  13. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்கடல் மல்லையூர் எனப்பட்ட மாமல்லபுரம்- குருக்கத்திப் பந்தரில் குருக்கத்தி மலரில் பிறந்தார்
  14. பூதத்தாழ்வார் பிறந்த நாள் எது? ஐப்பசித் திங்கள் அவிட்டநாளில் [பொய்கையாழ்வார் பிறந்த மறுநாள்1]
  15. பூதத்தாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் அம்சமாகத் தோன்றினார்
  16. பூதத்தாழ்வார் பாடிய தலங்கள் யாவை? திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாடகம், திருவத்தியூர், திருக்குடமூக்கு
  17. மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பேயாழ்வார்
  18. பேயாழ்வார் - பெயர்க்காரணம் யாது? திருமாலின் மீது கொண்ட பக்தியால் அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய்பிடித்தவர் போல் பாடியதால் பேயாழ்வார் எனப்பட்டார்.
  19. பேயாழ்வார் எங்கு பிறந்தார்? மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.
  20. பேயாழ்வார் எப்போது பிறந்தார்? ஐப்பசி மாத சதய நாள் [பூதத்தாழ்வார்]
  21. திருமாளின் வாளின் பெயர் என்ன? நாந்தகம்
  22. நாந்தகத்தின் அம்சமாகப் பிறந்தவர் யார்? பேயாழ்வார் 
  23. பேயாழ்வாரின் காலம் யாது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு
  24. திருமாலோடு சிவனையும் இணைத்துப் பாடிய ஆழ்வார் யார்? பேயாழ்வார்
  25. திருமழிசை ஆழ்வார் எங்கு பிறந்தார்? தொண்டை நாட்டின் பூவிருந்தவல்லி அருகில் உள்ள திருமழிசையில் பிறந்தார்
  26. திருமழிசை ஆழ்வார் எப்போது பிறந்தார்? தைமாதம் மக நட்சத்திரம்
  27. திருமாலின் சுதர்சனச்சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியவர் யார்? திருமழிசை ஆழ்வார்
  28. திருமழிசை ஆழ்வாரின் வேறுபெயர் யாது? பத்திசாரர்
  29. பிற சமயத்தவரை சாடிய, வீரவைணவர் என்று அழைக்கப்பட்டவர் யார்? திருமழிசை ஆழ்வர்
  30. திருமழிசை ஆழ்வாருக்கு தத்துவ உபதேசம் செய்தவர் யார்? பேயாழ்வார்
  31. திருமழிசை ஆழ்வாரின் சீடன் யார்? கணிக்கண்ணன்
  32. திருமால் பாம்புப்பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டது யாருடன்? திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன்
  33. நம்மாழ்வார் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூர்
  34. நம்மாழ்வாரின் பெற்றோர் யாவர்? காரியார், நங்கையார்
  35. நம்மாழ்வார் எப்போது பிறந்தார்? பிரமாதி ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்தார்
  36. ஆதிசேஷன் அவதாரமான புளியமரத்தடியில் அமர்ந்து 16 ஆண்டு தவம் செய்து இறை அருளால் பேசும் வரம் பெற்ற ஆழ்வார் யார்? நம்மாழ்வார்
  37. நம்மாழ்வார் சடகோபன் என்று அழைக்கப்படக் காரணம் யாது? சடம் என்ற வாய்வை அடக்கியதால் 
  38. பிறசமயம் என்னும் யானைக்கு அங்குசமாகத் திகழ்ந்தமையால் நம்மாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்? பராங்குசர்
  39. நம்மாழ்வாரின் சிறப்புப்பெயர்கள் யாவை? சடகோபர், பராங்குசர், மாறன், திராவிடசிசு, வைணவத்து மாணிக்கவாசகர், வகுளாபரணர்
  40. ஆழ்வாரில் தலைமையானவர் யார்? நம்மாழ்வார் [ அவர் அவயவி, பிற ஆழ்வார் அவயவம்]
  41. நம்மாழ்வார் எழுதிய நூல்கள் யாவை? திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
  42. நம்மாழ்வாரின் நான்கு நூல்களும் வைணவர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நான்கு வேதமாகப் போற்றப்படுகிறது.
  43. நம்மாழ்வார் நூல்களின் சிறப்புப் பெயர்கள் யாவை? திராவிட வேதம், செந்தமிழ் வேதம், ஆன்றதமிழ் மறைகள் ஆயிரம் 
  44. தென்கலை வைணவர்கள் மந்திரமாகக் கருதுவது யாது? திருவாய் மொழி
  45. திருவாய் மொழிக்கு தத்வார்த்த விளக்க உரை எழுதியவர் யார்? பெரியவாச்சான் பிள்ளை
  46. பெரிய திருவந்தாதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது? 87 வெண்பா
  47. திருவிருத்த பாடல் எண்ணிக்கை - 100 கட்டளைக்கலித்துறை பா
  48. திருவாசிரிய பாடல் எண்ணிக்கை - 7 ஆசிரியப்பா
  49. நம்மாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  50. மதுரகவியாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்குருகூருக்கு அருகில் உள்ள திருக்கோளூர்
  51. மதுரகவியாழ்வார் எப்போது பிறந்தார்? ஈசுவர ஆண்டு சித்திரை நாள்
  52. நம்மாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் கருடத்தாழ்வார் 
  53. மதுரகவியாழ்வார் - பெயர்க்காரணம் யாது?  மதுரமான [இனிய]  கவிகளைப் பாடுபவர்.
  54. நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார ஒளிப்பிழம்பு அழைத்துச் சென்ற நிகழ்வு நடைபெற்ற இடம் எது? அயோத்தி
  55. மதுரகவியாழ்வாரின் ஞானாசிரியர் யார்? நம்மாழ்வார்
  56. திருமாலின் தொண்டரை வணங்கிப் பாடியவர் யார்? நம்மாழ்வார்
  57. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக நம்மாழ்வார் சேர்க்கப்படாமைக்கான காரணம் யாது? திருமாலைப் பாடாமல் திருமால் அடியாரைப் பாடியது.
  58. நம்மாழ்வார் மீது பாடிய 11 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? கண்ணி நுண் சிறுதாம்பு
  59. நம்மாழ்வாரின் பாடல்களை எழுதித் தொகுத்தவர் யார்? மதுரகவியாழ்வார்
  60. திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரை தன் கடவுளாக எவ்வளவு காலம் வழிபட்டார்? 50 ஆண்டுகள்   
  61. சேர அரச மரபில் தோன்றியவர் யார்? குலசேகர ஆழ்வார் [திருமால் மீது கொண்ட பற்றால் அரசைத் துறந்தார்]
  62. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் எது? திருவஞ்சைக்களம்
  63. குலசேகர ஆழ்வாரின் தந்தை யார்? திருடவரதன் என்னும் மன்னன்
  64. குலசேகராழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன், பெருமாள்
  65. குலசேகர ஆழ்வார் தமிழில் பாடிய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? பெருமாள் திருமொழி
  66. குலசேகர ஆழ்வார் வடமொழியில் பாடிய நூல் பெயர் - முகுந்தமாலை
  67. பெருமாள் திருமொழி பாடப்பட்ட தளங்கள் யாவை? திருவரங்குஅம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு
  68.  ஆலயப்படியாய்த் தன்னை எண்ணிப் பாடிய குலசேகர ஆழ்வாரின் பெயரால் குலசேகரப்படி என்று அழைக்கப்பெற்ற படியுடைய தலம் எது? திருவேங்கடம்
  69. குலசேகர ஆழ்வார் மங்களா சாசனம் செய்த தலங்கள் யாவை? திருவரங்கம், திருக்கண்ண புரம், தில்லை
  70. குலசேகர் ஆழ்வார் எந்த ஆலயத்தின் மூன்றாம் மதிலைக் கட்டினார்? திருவரங்கம்
  71. குலசேகர ஆழ்வார் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை எவ்வாறு அழைக்கிறார்? 'ஆடிப்பாடி தொண்டரடிப் பொடி ஆழ்வார்'
  72. குலசேகர ஆழ்வாரின் காலம் எது? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
  73.  பெரியாழ்வார் எங்கு பிறந்தார்? திருவில்லிப்புத்தூர்
  74.  பெரியாழ்வார் எப்போது பிறந்தார்? ஆனி மாத, சுவாதி நாள்
  75.  பெரியாழ்வாரின் இயற்பெயர் யாது? விஷ்ணு சித்தர்
  76.  பெரியாழ்வாரின் சிறப்புப்பெயர் யாது? பட்டர்பிரான்
  77.  பெரியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 நூற்றாண்டு
  78.  பெரியாழ்வார் படைப்புக்கள் யாவை? திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
  79. கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடிய, பிள்ளைத் தமிழுக்கு முன்னோடி ஆனவர் யார்? பெரியாழ்வார்
  80. பன்னிரு ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வார் யார்? ஆண்டாள்
  81. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்? ஆண்டாள்
  82. ஆண்டாள் பிறந்த நாள் யாது? ஆடி மாத பூர நாள்
  83. ஆண்டாள் யாருடைய அம்சமாகத் தோன்றினாள்? பூமாதேவி
  84. ஆண்டாளின் இயற்பெயர் யாது? கோதை
  85. ஆண்டாளின் சிறப்புப்பெயர் யாது? சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி, கோதை நாச்சியார்
  86. ஆண்டாளின் நூல்கள் யாவை? திருப்பாவை, நாச்சியார் திருமொழி
  87. ஆண்டாளின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  88. தொண்டரடிப் பொடியாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு, திருமண் குடி
  89. தொண்டரடிப் பொடியாழ்வார் என்று பிறந்தார்? மார்கழி மாத கேட்டை நாள்
  90. திருமாலின் வனமாலையின் அம்சமாகப் பிறந்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
  91. தொண்டரடிப் பொடியாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  92. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் யாது? விப்ரநாராயணன்
  93. தேவதேவி என்னும் பரத்தையிடம் மனதைப் பறிகொடுத்தவர் யார்? தொண்டரடிப் பொடியாழ்வார்
  94. தொண்டரடிப் பொடியாழ்வாரை சிறை மீட்டவர் யார்? திருவரங்கத்தான்
  95. தொண்டரடிப் பொடியாழ்வாரின் நூல்கள் யாவை? திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
  96. திருப்பள்ளி எழுச்சியில் உள்ள பாடல்கள் எத்தனை? 10
  97. திருமாலையில் உள்ள பாடல்கள் எத்தனை? 45
  98. திருமங்கையாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டுத் திருமங்கையில் திருவாலி திருநகரிக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.
  99. திருமங்கையாழ்வார் எப்போது பிறந்தார்? நள ஆண்டு கார்த்திகை மாதம்
  100. திருமங்கையாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் வில்லின் அம்சம்
  101. திருமங்கையாழ்வாரின் சிறப்புப் பெயர்கள் யாவை? நீலன், பரகாலன்
  102. நீலன் எனப்படக் காரணம் யாது? அவரது உடலின் நிறம் நீலமாக இருப்பதால் [அவரது தந்தையின் பெயர் யாது நீலி]
  103. பரகாலன் எனப்படக் காரணம் யாது? திருமங்கையாழ்வார் சோழ மன்னனின் படைத்தலைவனாக இருந்த போது பகைவரை வென்றார். எனவே அவரது வீரத்தைப் போற்றி பரகாலன் எனப்பட்டார் [பின் திருமங்கை நாட்டின் அரசராக்கப்பட்டார்]
  104.  திருமங்கையாழ்வாரின் மனைவி பெயர் யாது? குமுதவல்லி
  105. வைணவ அடியாருக்கு உதவ கொள்ளையனாக மாறிய ஆழ்வார் யார்? திருமங்கையாழ்வார்
  106. திருடிய திருமங்கையாழ்வாரை திருத்த திருமால், திருமகள் வந்தனர். அப்போது அவரைத் திருத்திய பின் இறைவன், "ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார். 
  107. நாகை பௌத்த விகாரங்களைக் கொள்ளையடித்து திருவரங்க மூன்றாம் மதிலுக்குத் திருப்பணி செய்தவர் யார்? திருமங்கையாழ்வார்
  108. திருமங்கையாழ்வாரின் படைப்புக்கள் யாவை? பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
  109. நம்மாழ்வாரின் நான்கு வேதத்திற்கு ஆறு அங்கமாகத் திகழ்வன் யாவை? திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள்
  110. திருமங்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
  111. சங்கம் குறித்துத் திருமங்கையாழ்வார் கூறுவன யாவை? "சங்கமுகத்தமிழ் மாலை", "சங்கமலித்தமிழ் மாலை"
  112. திருப்பாணாழ்வார் எங்கு பிறந்தார்? சோழ நாட்டு உரையூர்
  113. திருப்பாணாழ்வார் எப்போது பிறந்தார்? கார்த்திகை மாத உரோகிணி நாள்
  114. திருப்பாணாழ்வார் பாணர்குடியுல் பிறந்ததால் பாணாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்
  115. குளத்தைத் தீட்டுப்படுத்தியதாக அந்தனர்களால்  தாக்கப்பட்டார் திருப்பாணாழ்வார். அந்த அந்தணர்களின் தவறை உணர்த்த அவரது உடலில் உள்ள இரத்தத்தைத் தன் உடலில் காட்டினர் திருமால்.
  116. திருப்பாணாழ்வாரை அடித்து, பின் திருமால் ஆணையால் அவரைத் தோளில் சுமந்த அந்தணர் தலைவர் யார்? லோகசாரங்கன்
  117. திருப்பாணாழ்வார் பாடிய பாசுரங்கள் -  அமலனாதிபிரான் [10 பாசுரம்]
  118. திருப்பாணாழ்வார் காலம் - கி.பி. 9 ஆம் நூற்றாண்டு















No comments:

Post a Comment

பக்தி இலக்கியம் - வைணவம்

   பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார். பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் ப...